Wednesday, 1 July 2015

சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள்: 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து சென்றனர் - அதிகாரி தகவல்

சென்னை, ஜூலை 1-சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள்: 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து சென்றனர் - அதிகாரி தகவல்
இன்று காலை 7 மணியளவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சுமார் 40 சதவீதம் பேரே ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
நேரம் போகப்போக 10 மணிக்கு பிறகு பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்தே வாகனம் ஓட்டினார்கள். 90 சதவீதத்துக்கு அதிகமானோர் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது. ஒரு சில பெண்கள் ஹெல்மெட்டை மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டப்படி சென்றனர். போலீசார் அறிவுறுத்திய பிறகு தலையில் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினார்கள்.
இன்று நடந்த ஹெல்மெட் சோதனை தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரத்து 900 இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. பெரும்பாலான விபத்துக்களில் தலையில் அடிபடுவதால்தான் உயிர் இழக்கிறார்கள். இதன் காரணமாக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதின் மற்றொரு பிரதி எங்களிடம் இருக்கும். இன்னொன்று கோர்ட்டுக்கு அனுப்பப்படும். ஹெல்மெட் அணியாமல் சிக்குபவர்கள் ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை கோர்ட்டில் ஒப்படைத்த பிறகுதான் வாகனம் திரும்பவும் வழங்கப்படும்.
சென்னையில் ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்டுகிறார்கள். சென்னை அண்ணா நகரில் இன்று ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment