ஆலந்தூர், ஜூலை 1–
துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் பணிக்காக ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றார். வேளச்சேரி நீச்சல் குளம் அருகே சென்ற போது பின்னால் வந்த சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய செல்வராஜ் வண்டியோடு கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் ஹெல்மெட்டோடு செல்வராஜின் தலை நசுங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கிண்டி போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த கணேசை கைது செய்தனர்.
No comments:
Post a Comment