தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கியதால், சில தினங்களாக, கன மழை பெய்கிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தொடர்ந்து மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு, ரேஷன் பொருட்களை அதிகளவில் அனுப்ப, உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழை சீசனை முன்னிட்டு, 11 கடலோர மாவடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு, முழு அளவில் உணவுப் பொருட்களை அனுப்பும்படி, ஒரு மாதத்திற்கு முன், நுகர்பொருள் வாணிப கழகத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது, கிடங்குகளில் போதியளவில் பொருட்கள் இல்லாததால் அனுப்பவில்லை. நவம்பர் மாத சப்ளைக்கான, ரேஷன் பொருட்கள் வழங்கல், தற்போது நடந்து வருகிறது. அதில், கடலோர மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதிக பொருட்கள் அனுப்பும்படி, வாணிப கழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழை சீசனை முன்னிட்டு, 11 கடலோர மாவடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு, முழு அளவில் உணவுப் பொருட்களை அனுப்பும்படி, ஒரு மாதத்திற்கு முன், நுகர்பொருள் வாணிப கழகத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது, கிடங்குகளில் போதியளவில் பொருட்கள் இல்லாததால் அனுப்பவில்லை. நவம்பர் மாத சப்ளைக்கான, ரேஷன் பொருட்கள் வழங்கல், தற்போது நடந்து வருகிறது. அதில், கடலோர மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதிக பொருட்கள் அனுப்பும்படி, வாணிப கழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment