‘‘நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன்’’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மீட்க வேண்டும்
நாகர்கோவிலில் நேற்று காலை நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி பேசிய அவர் கூறியதாவது:-
தமிழக தேர்தலை இனி பணம் தான் தீர்மானிக்குமா? இதற்கு மாற்றே இல்லையா? இதுதான் நிரந்தரமா? இனி பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டுமா?. இந்த நிலையில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. நான் மீட்பர் அல்ல, ஆனால் மீட்பர்கள் வழியிலேயே செல்கிற சாதாரண போர் வீரன்.
தேர்தலில் மக்கள் மனநிலைக்கு ஏற்ப வாக்குகள் வழங்குகிறார்கள். ஜனநாயக தீர்ப்பை தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தமிழகம் முழுவதிலும் பணம்தான் தீர்மானித்தது. இந்தநிலை நீடிக்க முடியாது. நீடித்ததாக இயற்கை நியதி கிடையாது.
எந்த அநீதிக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு முடிவு வரும். அந்த அநீதியை எதிர்த்து ஒரே நாளில் வென்றுவிட முடியாது. எந்த முயற்சியும் ஒரு நாளில் வெற்றி பெற்று விடாது. தோற்றுவிட்டோம் என்று தளர்ச்சி அடைந்தவனுக்கு லட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன். நாங்கள் ஒரு களத்தை இழந்திருக்கிறோம். யுத்தத்தை இழக்கவில்லை.
கட்சி அங்கீகாரம்
கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தால் முடியும். இதுவரை இந்தியாவில் தேர்தல் ஆணையம் அதைச் செய்யவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும்?. மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் வழங்குகிற வேட்பாளர் என்று தேர்தல் ஆணையத்திடம் நிரூபணம் செய்தால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை வழங்குகிற சட்டத்தை கொண்டு வாருங்கள். அங்கீகாரத்தை ரத்து செய்கிற அதிகாரம் இருந்தாலும் இன்னும் தெளிவான விதிமுறைகளை வகுத்து கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு இன்னும் அதிகமான காரணங்களை காட்டி சட்டத்தை நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.
மறியல்
முன்னதாக வைகோவிடம் பேட்டி காண்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருமணம் மண்டபம் முன் காத்து நின்றனர். அப்போது சில வீடியோகிராபர்கள் வைகோவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை படம் பிடித்தனர். இதைப்பார்த்த தக்கலை ஒன்றிய நிர்வாகியும், மற்றொருவரும் சேர்ந்து செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் திருமண மண்டபம் முன் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் அந்த திருமண மண்டபத்துக்கு வைகோ காரில் வந்தார்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளை மன்னிப்பு கேட்கச் சொன்னார். வைகோவும் இந்த சம்பவத்துக்காக பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மீட்க வேண்டும்
நாகர்கோவிலில் நேற்று காலை நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி பேசிய அவர் கூறியதாவது:-
தமிழக தேர்தலை இனி பணம் தான் தீர்மானிக்குமா? இதற்கு மாற்றே இல்லையா? இதுதான் நிரந்தரமா? இனி பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டுமா?. இந்த நிலையில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. நான் மீட்பர் அல்ல, ஆனால் மீட்பர்கள் வழியிலேயே செல்கிற சாதாரண போர் வீரன்.
தேர்தலில் மக்கள் மனநிலைக்கு ஏற்ப வாக்குகள் வழங்குகிறார்கள். ஜனநாயக தீர்ப்பை தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தமிழகம் முழுவதிலும் பணம்தான் தீர்மானித்தது. இந்தநிலை நீடிக்க முடியாது. நீடித்ததாக இயற்கை நியதி கிடையாது.
எந்த அநீதிக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு முடிவு வரும். அந்த அநீதியை எதிர்த்து ஒரே நாளில் வென்றுவிட முடியாது. எந்த முயற்சியும் ஒரு நாளில் வெற்றி பெற்று விடாது. தோற்றுவிட்டோம் என்று தளர்ச்சி அடைந்தவனுக்கு லட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன். நாங்கள் ஒரு களத்தை இழந்திருக்கிறோம். யுத்தத்தை இழக்கவில்லை.
கட்சி அங்கீகாரம்
கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தால் முடியும். இதுவரை இந்தியாவில் தேர்தல் ஆணையம் அதைச் செய்யவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும்?. மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் வழங்குகிற வேட்பாளர் என்று தேர்தல் ஆணையத்திடம் நிரூபணம் செய்தால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை வழங்குகிற சட்டத்தை கொண்டு வாருங்கள். அங்கீகாரத்தை ரத்து செய்கிற அதிகாரம் இருந்தாலும் இன்னும் தெளிவான விதிமுறைகளை வகுத்து கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு இன்னும் அதிகமான காரணங்களை காட்டி சட்டத்தை நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.
மறியல்
முன்னதாக வைகோவிடம் பேட்டி காண்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருமணம் மண்டபம் முன் காத்து நின்றனர். அப்போது சில வீடியோகிராபர்கள் வைகோவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை படம் பிடித்தனர். இதைப்பார்த்த தக்கலை ஒன்றிய நிர்வாகியும், மற்றொருவரும் சேர்ந்து செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் திருமண மண்டபம் முன் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் அந்த திருமண மண்டபத்துக்கு வைகோ காரில் வந்தார்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளை மன்னிப்பு கேட்கச் சொன்னார். வைகோவும் இந்த சம்பவத்துக்காக பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment