Thursday, 2 June 2016

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா 6–ந் தேதி நன்றி தெரிவிக்கிறார் வேனில் வீதி, வீதியாக பயணம்

சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா 6–ந் தேதி (திங்கட்கிழமை) நன்றி தெரிவிக்கிறார்.
ஜெயலலிதா வெற்றிநடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, வரும் 6–ந் தேதி (திங்கட்கிழமை) அவர் ஆர்.கே. நகர் தொகுதியில் வீதி, வீதியாக வேனில் பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
வாக்காளர்களுக்கு நன்றிஅ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, 16–5–2016 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.
அதனையொட்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு 6–6–2016 (திங்கட்கிழமை) அன்று நன்றி தெரிவிக்க உள்ளார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்க செல்லும் இடங்கள் விவரம் வருமாறு:–
வைத்தியநாதன் பாலம்எம்.ஜி.ஆர். சிலை – பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு – ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு – வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு, வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம் – எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு.
எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை – ஜெ.ஜெ. நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மகாராணி தியேட்டர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
சென்னை,

No comments:

Post a Comment