காணாமல் போன பட அதிபர் மதன் உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது கதி என்ன ஆனது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவர் மீது நேற்று ஏராளமான மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன.
மர்மம் நீடிப்புசினிமா பட அதிபர் மதன் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் காணாமல் போன சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனை கண்டுபிடிக்கும்படி அவரது மனைவிகள் சிந்து, சுபலதா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மதன் எடுத்துச்சென்ற பி.எம்.டபிள்யூ கார் சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விமானத்தில் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்தும் தங்கியுள்ளார். டெல்லியில் இருந்து அவர் எங்கு சென்றார்? என்பதுதான் தொடர்ந்து மர்மமாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மோசடி புகார்கள்மதன் மீது ஏற்கனவே பிரபல கல்வி நிறுவனம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மணப்பாறையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மதன் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக ரூ.52 லட்சத்தை மதன் மோசடி செய்துவிட்டதாக வெங்கடேசன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மேலும் 5 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதன் மீது மோசடி புகார்களை கொடுத்தனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பஞ்சனி மகேஷ் என்பவரிடம் ரூ.1 கோடியே 96 லட்சம் சுருட்டி விட்டதாக மதன் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.
மருத்துவ மேல்படிப்பு சீட் வாங்கித் தருவதாக மதன் மேற்கண்ட பணத்தை பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த டாக்டர் சகுந்தலா என்பவரும், மதனிடம் ரூ.60 லட்சம் ஏமாந்துள்ளதாக புகார் மனு கொடுத்துள்ளார்.
மதன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மர்மம் நீடிப்புசினிமா பட அதிபர் மதன் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் காணாமல் போன சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனை கண்டுபிடிக்கும்படி அவரது மனைவிகள் சிந்து, சுபலதா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மதன் எடுத்துச்சென்ற பி.எம்.டபிள்யூ கார் சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விமானத்தில் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்தும் தங்கியுள்ளார். டெல்லியில் இருந்து அவர் எங்கு சென்றார்? என்பதுதான் தொடர்ந்து மர்மமாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மோசடி புகார்கள்மதன் மீது ஏற்கனவே பிரபல கல்வி நிறுவனம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மணப்பாறையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மதன் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக ரூ.52 லட்சத்தை மதன் மோசடி செய்துவிட்டதாக வெங்கடேசன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மேலும் 5 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதன் மீது மோசடி புகார்களை கொடுத்தனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பஞ்சனி மகேஷ் என்பவரிடம் ரூ.1 கோடியே 96 லட்சம் சுருட்டி விட்டதாக மதன் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.
மருத்துவ மேல்படிப்பு சீட் வாங்கித் தருவதாக மதன் மேற்கண்ட பணத்தை பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த டாக்டர் சகுந்தலா என்பவரும், மதனிடம் ரூ.60 லட்சம் ஏமாந்துள்ளதாக புகார் மனு கொடுத்துள்ளார்.
மதன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
0
No comments:
Post a Comment