Monday, 21 December 2015

அனுமதி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மதுரையில் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்

மதுரை, டிச. 20–அனுமதி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மதுரையில் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி 17–ந்தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தன்றும், பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்திலும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக வீர விளையாட்டுக்கு தடை ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய–மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு காளைகளை துன்புறுத்தக் கூடாத வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உரிய உத்தரவை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர் களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
தடைபட்ட ஜல்லிக்கட்டு எப்படியாவது இந்த பொங்கல் தினத்தில் நடக் கும் என்ற நம்பிக்கை ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உரிய பயிற்சி கொடுத்து தயாராகி வருகிறது.

No comments:

Post a Comment