நேற்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு, திமுக வின் வேட்பாளர், Dr.எழிலனை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.
நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவில் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார்.இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர்
சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அத்துடன் அவர் மீதான வழக்கு விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தன் மீது தமிழகம் முழுவதும் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஷ்பு சொத்துபட்டியலில், தனது கையிருப்பாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 600ம், அவரது கணவர் சுந்தர்.சி கையிருப்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, குஷ்பு தன் பெயரில் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 2 கார்கள் மற்றும் கணவர் பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி உள்ளன என்றும் கூறியுள்ளார்.
குஷ்பு தனது பெயரில் ரூ.4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்பில் அசையும் சொத்துக்களும், தனது கணவர் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளது என்று வேட்பு மனுவில் கூறியுள்ளார். அத்துடன் தனது முதல் குழந்தை பெயரில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 304 மதிப்பிலும், இரண்டாவது குழந்தை பெயரில் ரூ.12 லட்சத்து 560 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு தன் பெயரில் செங்கல்பட்டு முட்டுக்காடு பகுதியில் சொகுசு பங்களா, திருக்கழுகுன்றத்தில் பங்களா, கணவர் பெயரில் மேடவாக்கத்தில் பங்களா, கோயம்புத்தூரில் பங்களா என தனது பெயரில் ரூ.17 கோடியே 99 லட்சம் 87 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.16 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குஷ்பு வேட்பு மனுவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment