Friday, 2 July 2021

அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://t.co/ePrTZ05lKP என்ற இணையதளத்தில் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment