கன்னியாகுமரி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் IPS கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் திரு தங்கராஜ் மேற்பார்வையில்,உதவி ஆய்வாளர் சுந்தர் ராஜ் மற்றும் காவல் துறையினரோடு பேயன்குழி மீன் மார்க்கெட் அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் செம்பொன்விளையை சேர்ந்த ஜோயலின் ஜோ மற்றும் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பதும், அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் .
குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. பின்பு இருவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment