Monday, 4 June 2018

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (T J U) சார்பில்மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (T J U) சார்பில் தமிழக மக்களின் வாழ்வாதாரமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், வரும் 6-4-2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து பகல் 1.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
பத்திரிகை அன்பர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் .
இப்படிக்கு
டாக்டர்.கி.காளிதாஸ் எம்.ஏ.எல்.எல்.பி
மாநில தலைவர்

Monday, 14 May 2018

T.J.U. LEADER BIRTHDAY

 சென்னை, மே  10 தமிழ்நாடு பத்திரிகையாளர்  யூனியன்  மாநில தலைவர் ஐயா காளிதாஸ்  அவர்களின் பிறந்தநாள் ,ஆதம்பாக்கம் வள்ளலார் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் டி ,ஜே .யூ  மாநில  பொதுச்செயலாளரும் , நீதியின் தீர்ப்பு ஆசிரியர்மற்றும் வெளியிட்டாளருமான  திருமதி .கிருஷ்ணவேணி  கலந்துகொண்டார்.
 மேலும் டி .ஜே.யூ  தென் சென்னை மாவட்ட தலைவர்  ரவீந்திரகுமார் , செயலாளர் சிவா ,பொருளாளர் ஞானமணிக்கம்  மற்றும் காப்பக  நிர்வாகிகளும்  கலந்து கொண்
டனர் . 

புழுதி புயலுக்கு 60 பேர் பலி

புதுடில்லி : பல்வேறு மாநிலங்களில் நேற்று கனமழையுடன் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் வீசிய புழுதி புயலுக்கு 60 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.,யில் மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதே போன்று ஆந்திரா, மேற்குவங்கம், டில்லி பகுதிகளிலும் புழுதி புயலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் மட்டும் 7 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை மற்றும் புழுதி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்

புதுடில்லி : காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிட்ட கவரில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மே 3ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், இனி கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் மே 14ம் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்ததால், காவிரி நதிநீர் பங்கீடு செயல் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் வரைவு திட்ட அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு காவிரி திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


என்ன திட்டம்:
மத்திய அரசின் வரைவு திட்டத்தில், காவி மேலாண்மையை வாரியமாகவோ, கமிஷனாகவோ அமைக்கலாம் என்றும் அக்குழுவில் 10 பேர் வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது.
வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

முருகன், கருப்பசாமி காவல் நீட்டிப்பு

விருதுநகர் : மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
இவர்கள் இருவரும் இன்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்கள் இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் அடுத்த விசாரணை மே 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Saturday, 24 February 2018

நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மார்ச் 1 முதல் காரைக்காலில் விண்ணப்பிக்கலாம்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மார்ச் 1 முதல் காரைக்காலில் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அஞ்சலகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. சென்னை பாஸ்போர்ட் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த மையத்தில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் விண்ணப்பித்து வந்தனர்.

அருகிலுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரைக்காலில் விண்ணப்பிக்க வசதி செய்து தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

நாகை, திருவாரூர் மாவட்டங்கள் திருச்சி பாஸ்போர்ட் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டது.

பாஸ்போர்ட் மண்டலங்களுக்கு இடையேயான எல்லைகளை சீரமைக்க. வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவெடுத்தது.

சென்னை பாஸ்போர்ட் மண்டலத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மார்ச் 1ம் தேதி முதல் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

எனவே மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காரைக்காலில் விண்ணப்பிக்கலாம். இனி அவர்கள் தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வரவேண்டியதில்லை  என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் சேவை மையம் நாளை செயல்படும் - பிஎஸ்என்எல் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சேவை மையம் நாளை செயல்படும் - பிஎஸ்என்எல் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு.

கிண்டி ஆளுநர் மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு.

பிரதமர் மோடியை, அமைச்சர் தங்கமணி தனியாக சந்தித்ததால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

முக்கிய செய்திகள்

சென்னையில் 20 ஆயிரம் போலீசார் குவிப்ப


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்படுகிறது

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். திறந்துவைக்கின்றனர்
தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் வருகையொட்டி சென்னையில் 20 ஆயிரம் போலீசார் குவிப்பு


ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு.

திருவாரூர்: கமலாபுரம் அருகே விளைநிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு.

குழாயில் இருந்து வெளியான கச்சா எண்ணெய் வயல் வெளிகளில் பரவியதாக விவசாயிகள் புகார்.

காலா டீசர் வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவிப்பு.


மார்ச் 1-ம் தேதி காலா டீசர் வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவிப்பு.

”இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பார்த்தது இல்ல..ல... பார்ப்பீங்க..." என சமூகவலைதளத்தில் தனுஷ் பதிவு.
.

1,500 சிறை கைதிகளை விடுதலை 



ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1500 சிறை கைதிகள் விடுதலையாகின்றனர்.

மாநிலம் முழுவதும் 1,500 சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவு.

மதுரையில் 340, பாளையங்கோட்டையில் 300 கைதிகள் விடுதலையாக உள்ளனர்.

அரசு உத்தரவு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடுத்தவாரம் டெல்லி பயணம் -



பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடுத்தவாரம் டெல்லி பயணம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்பேச்சு


மக்களை காப்பாற்றப் போவது நாங்கள் தான் என்பவர்களின் பேச்சு விரைவில் புஸ்வாணமாகும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.



தன்மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை - ப.சிதம்பரம் மனு.



அரசியல் வானில் பறக்க நினைக்கும் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் வெடித்து சிதறும் - துணை முதலமைச்சர்.
எனது மற்றும் என் மகன் இல்லங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை செய்வது அடிப்படை உரிமையை பறிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு.

தன்மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை - ப.சிதம்பரம் மனு.

ரத்த பரிசோதனை மைய ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த வாரம் எரிசாராயம் வீசப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மைய ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

யமுனா மீது எரிசாராயம் வீசியதாக ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா ஏற்கனவே கைது.


 பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்து கொடூர விபத்து.



பீகார் மாநிலம் முசாபர்பூரில் பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்து கொடூர விபத்து.

வாகனம் மோதியதில் 9 மாணவர்கள் உயிரிழப்பு.

விபத்தில் 24 மாணவர்கள் படுகாயம்....

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் இன்று வெளியீடு
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ”நமது புரட்சித்தலைவி அம்மா” வெளியீடு.


 கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 -ஓவர் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாகிஸ்தான் படையினர் அத்துமீறிதுப்பாக்கிச்சூடு .


காஷ்மீரின் எல்லையில் அமைந்துள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி இந்திய ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.


கரை வேட்டி கட்ட வேண்டாம்: கமல் வேண்டுகோள் 

கரை வேட்டி கட்ட வேண்டாம், காவல்துறை அனுமதியின்றி பேனர் ,
       வைத்தல் ' விளம்பரம் செய்தல் கூடாது என நடிகர் கமலஹாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுடன் கமல் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெ. சிலையை வடிவமைத்தவருக்கு தங்க மோதிரம் பரிசு...

முக்கிய செய்திகள்


: ஜெ.வின் கனவுத் திட்டம் "அம்மா ஸ்கூட்டி".. தொடங்கி வைத்தார் மோடி
                                                                                                                  ஜெயலலிதா பிறந்த
 


நாளையொட்டி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்து பேசி வருகிறார். கவர்னர் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள்  கலந்து கொண்டனர்






: தமிழில் வணக்கம் சொல்லி பேச்சை தொடங்கினார் பிரதமர் மோடி.

தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன் - தமிழில் பிரதமர் பேச்சு.

பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன், பெண்கள் படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம் - பிரதமர் மோடி.




: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி.

காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து பெற்று தந்தோம் - பிரதமர் மோடி.

உஜாலா திட்டத்தின் மூலமாக கரியமில வாயு மாசு குறைந்துள்ளது - பிரதமர் மோடி.



: முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் - பிரதமர் மோடி.

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளோம் - பிரதமர் மோடி.



 காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக மக்களின் சார்பாக பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன் -முதலமைச்சர் பழனிசாமி.

காவிரிக்கு பதில் இல்லை...

காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி நதிநீர் பிரச்னை பற்றி தனது உரையில் பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை.



: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சேவை மையம் நாளை செயல்படும் - பிஎஸ்என்எல் அறிவிப்பு