புதுடில்லி : பல்வேறு மாநிலங்களில் நேற்று கனமழையுடன் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் வீசிய புழுதி புயலுக்கு 60 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.,யில் மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதே போன்று ஆந்திரா, மேற்குவங்கம், டில்லி பகுதிகளிலும் புழுதி புயலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் மட்டும் 7 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை மற்றும் புழுதி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதே போன்று ஆந்திரா, மேற்குவங்கம், டில்லி பகுதிகளிலும் புழுதி புயலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் மட்டும் 7 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை மற்றும் புழுதி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment