Thursday, 9 April 2015

சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஐதராபாத், ஏப்.9-                   
சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் எழுந்தது.

நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என கூறப்பட்ட இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வண்ட்லமணி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.                   

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஐதராபாத் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தியது. சத்யம், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 3 ஆயிரம் ஆவணங்கள் சான்றாவணங்களாக குறிக்கப்பட்டன.                   

இந்த வழக்கு கடைசியாக கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி, “இந்த வழக்கில் ஏப்ரல் 9-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும். இதை நான் தெளிவாக சொல்கிறேன். தீர்ப்புக்கான இறுதி நாள் ஏப்ரல் 9-தான். இனியும் ஒத்திவைக்கப்படும் கேள்விக்கே இடமில்லை” என கூறினார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் கிரிமினல் சூழ்ச்சி மற்றும் மோசடியில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் அல்லது நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment