Tuesday, 11 March 2014

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.கருணாநிதி

சென்னை,
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும், 35 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று தி.மு.க. வெளியிட்டது. இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 100 தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதி, கூட்டாச்சி தத்துவம், மதர்சார்பின்மை பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேது சமூத்திரத் திட்டத்தை செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவர வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இடஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதை மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள இயற்கை வளங்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஒழிக்க தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment