Tuesday, 11 March 2014

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை -தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்



சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அபோது அவர்  கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி நாளை தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்படு கிறது. அனைத்து வாக்கு சாவடி களிலும் ஊழியர்கள் அமர்ந்து பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
அங்கேயே விண்ணப்பப் படிவம் கிடைக்கும். புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் முகவரி சான்று, பே£ட்டோ, வயது சான்றிதழ் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 60,418 ஓட்டு சாவடிகளில் இதற்கான பணிகள் நடக்கிறது.
வாக்காளர் புகைப்பட அட்டை இருந்து அவர்களுக்கான பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் ஓட்டு போட இயலாது. எனவே அவர்களும் நாளைய முகாமில் பெயர்களை சேர்க்கலாம்.
நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஒவ்வொரு கட்சியினரும் கடை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினோம். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினேன்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் மாஜிஸ்திரேட்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி, 4 பே£லீசார், வீடியோ கிராபர் ஆகியோர் இருப்பார்கள். இது தவிர திடீரென சோதனை செய்யவும் தனிக்குழு அமைக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘அம்மா’ என்கிற பெயர், எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ள முகப்பு தோரணம், அம்மா குடிநீர் பாட்டில், சிறிய பஸ்களில் உள்ள இலைகள், டி.ஜி.பி.யை மாற்றுவது தொடர்பான புகார்கள் ஆகியவை பற்றி தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் தகுந்த உத்தரவு வரவில்லை.
கட்சிகளின் முக்கிய தலைவர்கள்  தங்களது பிரசார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 5-ந்தேதிக்குள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் யாரும் பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது.
ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் இது பற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தலில் செலவழிக்கும் செலவு தொகைகளை வேட்பாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பணி மாற்றத்துக்கு ரூ.10 கோடி லஞ்சம்: பவன்குமார் பன்சால் மருமகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்



புதுடெல்லி,
ரெயில்வே வாரியத்தில் பணப்புழக்கம் அதிகம் உள்ள பிரிவில் உறுப்பினராக பணி மாற்றம் செய்ய ரூ.10 கோடி லஞ்ச பேரம் பேசப்பட்டு, முன்பணமும் வழங்கப்பட்டது. அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பவன்குமார் பன்சால் இதன்காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது மருமகன் விஜய்சிங்லா மற்றும் 9 பேரை சி.பி.ஐ. கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.
டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய்சிங்லா உள்பட 10 பேர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்துடன் தொடர்புடைய குற்றச்சதியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை ஆகஸ்டு 25&ந்தேதிக்கு நீதிபதி சுவர்ண காந்தா சர்மா ஒத்திவைத்தார். அப்போது அரசுதரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 29 தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு

ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்த பகுதிக்கு திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்துக்கப்பல்களில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி விரட்டினர். பின்னர் மீனவர்களை சுற்றி வளைத்து 29 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். மீனவர்களின் 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவை திரும்ப பெற முடியாது மத்திய அரசு பிடிவாதம்


புதுடெல்லி,
கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,  கருணாநிதியின் மனுவில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.கருணாநிதி

சென்னை,
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும், 35 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று தி.மு.க. வெளியிட்டது. இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 100 தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதி, கூட்டாச்சி தத்துவம், மதர்சார்பின்மை பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேது சமூத்திரத் திட்டத்தை செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவர வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இடஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதை மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள இயற்கை வளங்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஒழிக்க தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களவையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் இன்று காலை அவை தொடங்கியதும், ஆந்திரா மாநில உறுப்பினர்கள் தெலுங்கானா விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில்
ஈடுபட்டனர்.  காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சியினர் அமளியினால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று வலியுறுத்தினார்.