இதன் காரணமாக கடனை வசூலிப்பதில் கடமை காட்டினாலோ சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார் இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவிக்கும் இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடன் வசதி தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மசோதா தெரிவிப்பது என்னவென்றால் தனி நபர் அல்லது தனி நபர்கள். உதவி குழுக்கள் அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல கடன் வழங்கும் நிறுவனங்களில் வலுக்கட் டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கி நலிவடைந்த பிரிவினரை அது பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாக கருதப்பட்டது.அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளதற்கு ஏற்ப இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இந்த மசோதா வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள் , கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் கடன் வாங்கியவரிடம் கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால் வலுக்கட்டாயமாக வசூல் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த வங்கிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் கூட இந்த சட்டம் பொருந்தும்.
இந்த சட்டம் கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய் நடவடிக்கைக் உட்படுத்தக் கூடாது. அந்த வகையில் அவர்களுக்கு இடையூறு விளைவித்தல், வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகும் இடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துக்களில் தலையிடுதல் அதை பயன்படுத்த விட முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக் கொள்ளுதல், அவரது வீடு வசிக்கும் இடம் வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துதல், அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருள்கள் ,வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல் போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளாக 20 - பிரிவின் படி கருதப்படும்.
20 - பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின்தொடர்தல் போன்ற குற்றங்களை செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் வெளி முகமைகளை பயன்படுத்துதல் ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக ஐந்தாண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து அது கடன் வழங்க நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய் நடவடிக்கையான இருட்டாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108 -ஆம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும்.
கடன் வழங்கும் நிறுவனம் தொழில் நடத்த விரும்பும் மாவட்டம் அல்லது வட்டாரத்தில் பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவத்தை அளித்து பதிவு செய்ய வேண்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும் கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் பதிவு செய்துள்ள நிறுவனத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் அந்த நிறுவனம் கடனுக்கான வட்டி வீதம் அலுவலக விபரங்கள் வலைதளம் தகவல் தொகுப்பு ஆகியவற்றை சிறிய புத்தகமாக அல்லது விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment