Tuesday, 3 June 2025

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு -பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்துள்ளது தமிழக காவல் துறை- முதல்வர் ஸ்டாலின்

 



பொள்ளாச்சி  வழக்கு தீர்ப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு: தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்துள்ளது தமிழக காவல் துறை. விசாரணையின்போது, உயர் நீதிமன்றமே பாராட்டும் வகையில், நியாயமாகவும், விரைவாகவும் ஐந்தே மாதத்தில் வழக்கை நடத்திமுடித்து, கடும் தண்டனை பெற்று தந்துள்ளோம். இதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டதாக மகளிர் நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.

இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியில்கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்திகொண்ட சிலரது எண்ணம் தவிடுபொடி ஆகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என சமீபத்தில் நாம் கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு ஏற்ப, இந்த வழக்கில் எந்தசலுகையுமின்றி கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment