Thursday, 13 March 2025

தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் .- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு




. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில்

கோவை உள்பட சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இப்பணிகளுக்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதில் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம். 2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்'

No comments:

Post a Comment