Monday, 30 December 2013

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லை!

லண்டன் : பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா திகழ்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
 சர்வதேச தகவல் பாதுகாப்பு அமைப்பு என்பது லண்டனை தலைமையகமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதற்காகவும் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி இந்தியா, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த வருடம் 13 பத்திரிகையாளர்கள் இறந்துள்ளதாகவும் அதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தக் கொலைகள் சம்பந்தமாக முழுமையான விசாரணைகளும் நடைபெறவில்லை என இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
போர் நடைபெற்று வரும் சிரியா ஆபத்தான நாடுகளில் முதலாவதாகவும், பிலிப்பைன்ஸ் இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment