Saturday, 28 December 2013

கூடங்குளம் குடிநீர் திட்டத்திற்கு ரூ.68.10 கோடி ஒதுக்கீடு

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, குடிநீர் வழங்க, 68.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களுக்குட்பட்ட, கூடங்குளம் உட்பட, 13 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு, தாமிரபரணி ஆற்று நீர் வழங்க, கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, 68.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்புக்காக, 87 லட்சம் ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 13 ஊராட்சிகளில் உள்ள, 100 ஊரக குடியிருப்புகளில், நபர் ஒருவருக்கு, 55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது, உறுதி செய்யப்படும்.
Click Here

No comments:

Post a Comment