பா.ஜ., - தே.மு.தி.க., பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. 18 தொகுதி கள் கேட்ட, தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ., அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், கூட்டணி முடிவை, அதிகாரப்பூர்வமாக இன்று, தே.மு.தி.க., அறிவிக்கலாம் என, பா.ஜ., வட்டாரம் நம்பிக்கை தெரிவித்தது.
கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்து, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருச்செந்தூர் சென்று, முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். இந்த கூட்டணிக்கு, காரணகர்த்தாவாக செயல்பட்ட, காந்திய மக்கள் கட்சி தலைவர், தமிழருவி மணியன், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு உள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், அவரது மைத்துனர், சுதீஷுடன், பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்திய பேச்சில், பா.ஜ., தரப்பில், 'தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது' என்பதை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். அதை ஏற்று, கூட்டணி முடிவை அறிவிக்கும்படியும், பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, 'சிங்கப்பூரில் உள்ள விஜயகாந்திடம், இந்த தகவலை தெரிவித்து, அவரது ஒப்புதலுடன், நாளை (27ம் தேதி) அறிவிப்பு வெளியிடுவோம்' என, பா.ஜ., தலைவர்களிடம், சுதீஷ் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தே.மு.தி.க., தன் முடிவை, இன்று அறிவிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பா.ஜ., அணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையை துவங்கிய, தே.மு.தி.க., முதலில், 20 தொகுதிகள் கேட்டு உள்ளது. பின், அது, 18, 16 என, குறைந்தது. அதேசமயம், பா.ஜ., தரப்பில், 12 தொகுதிகள் என்ற நிலையிலேயே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
No comments:
Post a Comment