சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி
விவேக்கின் வீட்டில் நேற்று 5-வது நாளாக சோதனை நீடித்தது. இதைத் தொடர்ந்து,
மாலை 5.50 மணி அளவில் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி
அலுவலகத்துக்கு அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர
விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘பெரும்பாலான நிகழ்வுகள் விவேக்கைச் சுற்றியே நடந்திருக்கின்றன. இதுவரை 251 இடங்களில் உள்ள சொத்துகள் பற்றி முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 355 பேருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம். 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம், வங்கிப் பரிமாற்றம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடைக்கால அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவேக்தான் இந்த விசாரணையில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என கருதுகிறோம்’’ என்றார்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘பெரும்பாலான நிகழ்வுகள் விவேக்கைச் சுற்றியே நடந்திருக்கின்றன. இதுவரை 251 இடங்களில் உள்ள சொத்துகள் பற்றி முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 355 பேருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம். 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம், வங்கிப் பரிமாற்றம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடைக்கால அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவேக்தான் இந்த விசாரணையில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என கருதுகிறோம்’’ என்றார்.
வீட்டு வேலையாட்கள், கார் டிரைவர்கள் என பினாமி பெயரில் சொத்துகள்
வாங்கப்பட்டுள்ளதா, கடந்த ஆண்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது,
பழைய ரூபாய் நோட்டுகள் முறைகேடாக மாற்றப்பட்டதா, வேறு பலரது வங்கிக்
கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா, நடராஜனைப் பார்ப்பதற்காக சசிகலா கடந்த
மாதம் சென்னை வந்தபோது, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனைகள் எதுவும்
நடந்ததா என்றும் விவேக்கிடம் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment