Wednesday, 2 February 2022

செம்­மொ­ழிச்­சாலை எனப் பெயர் மாற்­றம்

: சென்னை, ஜன. –
‘‘சென்னை மேட­வாக்­கம் – சோழிங்­க­நல்­லுார் இணைப்­புச்­சாலை, இனி ‘செம்­மொ­ழிச்­சாலை’ என்று பெயர் மாற்­றம் செய்­யப்­படும்,’’ என, முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.
செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்­தால் வழங்­கப்­படும், ‘கரு­ணா­நிதி செம்­மொ­ழித் தமிழ் விருது’ வழங்­கும் விழா, நேற்று சென்னை கோட்­டூர்­பு­ரம் அண்ணா நுாறறாண்டு நுாலகத்­தில் நடந்­தது. கடந்த, 2010 முதல் 2019 வரை, தேர்வு செய்­யப்­பட்ட தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு, முதல்­வர் விரு­து­களை வழங்கி பேசி­ய­தா­வது:
தமிழ் தொன்­மை­யான மொழி என்­பதை, உல­கம் முழு­தும் உள்ள, மொழி­யி­யல் அறி­ஞர்­கள், இன­வி­யல் அறி­ஞர்­கள் சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். தொல்­பொ­ருள் ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட உண்மை.
தமிழ் குறிப்­பிட்ட நாட்டு மக்­கள் பேசும் மொழி­யாக மட்­டு­மல்ல. ஒரு பண்­பாட்­டின் அடை­யா­ள­மாக இருக்­கிறது. நம் தமிழ் மொழி­யா­னது, நிலத்­துக்கு, மண்­ணுக்கு, இயற்­கைக்கு, மக்­க­ளுக்கு, பண்­பாட்­டுக்கு இலக்­க­ணத்தை வகுத்­தி­ருக்­கக் கூடிய மொழி.
தமிழ் என்­றாலே இனிமை என்­று­தான் பொருள். உல­கின் மூத்த மொழி­களில் ஒன்று. தமிழ் எந்த மொழி­யில் இருந்­தும் கடன் வாங்கி உரு­வான, கிளை மொழி அல்ல. தமி­ழில் இருந்­து­தான் ஏரா­ள­மான மொழி­கள் உரு­வாகி உள்­ளன.
செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னம், 41 செவ்­வி­யல் தமிழ் நுால்க­ளின் ஆய்­வுக்கு முத­லி­டம் வழங்கி வரு­கிறது. தொல் பழங்­கா­லம் முதல், கி.பி.,6ம் நுாற்றாண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­குள் தோன்­றிய, இலக்­கிய, இலக்­க­ணம் குறித்த ஆய்­வினை மேற்­கொள்ள, இந்­நி­று­வ­னம் உரு­வாக்­கப்­பட்­டது. தமிழ்­மொழி ஆய்­வி­லும், அதன் மேம்­பாட்­டி­லும், தனிக்­க­வ­னம் செலுத்தி வரு­கிறது.
அந்த வரி­சை­யில், செம்­மொ­ழித் தமி­ழாய்­வில் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பு செய்­த­வர்­க­ளுக்கு, விரு­து­கள் வழங்கி சிறப்­பித்து வரு­கிறது. செம்­மொ­ழித் தமி­ழாய்வு நிறு­வ­னத்­துக்கு, 2008 ஜூலை, 24ம் தேதி தனது சொந்த நிதி­யில் இருந்து, ஒரு கோடி ரூபாயை கரு­ணா­நிதி வழங்­கி­னார். அவர் பெய­ரால் அறக்­கட்­டளை நிறு­வப்­பட்டு, தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு விருது வழங்­கப்­ப­டு­கிறது.
இந்­தி­யா­வி­லேயே மிக உய­ரிய விரு­தாக, 10 லட்­சம் ரூபாய் பரி­சுத் தொகை கொண்­டது. அத்­து­டன் பாராட்டு இத­ழும், கரு­ணா­நிதி உரு­வம் பொறித்த நினை­வுப்­ப­ரி­சும் வழங்­கப்­படும். கடந்த, 2010ல் விருது வழங்­கப்­பட்­டது. அதன்­பின் விருது வழங்­க­வில்லை. அதை பேசி அர­சி­ய­லாக்க விரும்­ப­வில்லை.
தமி­ழுக்கு, தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு செய்ய வேண்­டிய மரி­யா­தை­யில் கூட, அர­சி­யல் புகுந்­த­தன் கார­ண­மாக, 2011 முதல் 2019 வரை, விரு­து­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. தி.மு.க., அரசு பொறுப்­பேற்ற பிறகு, விரு­தா­ளர்­கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
தி.மு.க., ஆட்சி தமி­ழுக்கு ஆற்­றிய பணி­க­ளின் தொடர்ச்­சி­யாக, செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்­தின் புதிய வளா­கம் அமைந்­துள்ள, மேட­வாக்­கம் – சோழிங்­க­நல்­லுார் இணைப்­புச்­சாலை, இனி ‘செம்­மொ­ழிச் சாலை’ எனப் பெயர் மாற்­றம் செய்­யப்­படும்.
செம்­மொ­ழிச் சிறப்­பு­களை, உல­கெங்­கும் கொண்டு சேர்க்­கும் வகை­யில், முதல்­கட்­ட­மாக தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் உள்ள, ஐந்து பல்­க­லை­களில், ‘செம்­மொ­ழித் தமிழ் இருக்­கை­கள்’ அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். செம்­மொழி நிறு­வ­னம் முன் வைத்­துள்ள இலக்­கு­களை அடைய, தமி­ழக அரசு எப்­போ­தும் துணை நிற்­கும்.
மொழி குறித்த ஆய்­வு­கள், தமி­ழ­கத்­தோடு, இந்­திய எல்­லை­யோடு முடிந்து விடா­மல், உல­க­ளா­வி­ய­தாக அமைய வேண்­டும். உலக மொழி­யி­யல் கோட்­பா­டு­களை உள்­ள­டக்­கி­ய­தாக, நமது ஆய்­வு­கள் அமைய வேண்­டும். தமிழை ஆட்சி மொழி­யா­க­வும், வழக்­காடு மொழி­யா­க­வும் மேலும் உயர்த்­திட, தமி­ழக அரசு தொடர்ந்து குரல் கொடுக்­கும்.
இவ்­வாறு, முதல்­வர் பேசி­னார்.
விழா­வில், அமைச்­சர்­கள் துரை­மு­ரு­கன், பொன்­முடி, தங்­கம் தென்­ன­ரசு, சுப்­பி­ர­ம­ணி­யன், மகேஷ் மற்­றும் அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர்.
விருது பெற்­ற­வர்­கள் விப­ரம்
ஆண்டு – விரு­தா­ளர்­கள்
2011 – கோதண்­ட­ரா­மன், சென்னை பல்­கலை முன்­னாள் துணை­வேந்­தர்
2012 – சுந்­த­ர­மூர்த்தி, தமிழ் பல்­கலை முன்­னாள் துணை­வேந்­தர்
2013 –  மரு­த­நா­ய­கம், புதுவை பல்­கலை முன்­னாள் பதி­வா­ளர்
2014 – மோக­ன­ராசு, திருக்­கு­றள் ஆய்வு மையம் முன்­னாள் தலை­வர்
2015 – மறை­மலை இலக்­கு­வ­னார், சென்னை மாநி­லக் கல்­லுாரி முன்­னாள் தமிழ் பேரா­சி­ரி­யர்
2016 – ராஜன், புதுவை பல்­கலை வர­லாற்­றுத்­துறை முன்­னாள் பேரா­சி­ரி­யர்
2018 – ஈரோடு தமி­ழன்­பன், சென்னை புதுக்­கல்­லுாரி முன்­னாள் தமிழ் பேரா­சி­ரி­யர்
2019 – சிவ­மணி – தஞ்­சா­வூர் கரந்­தைப் புல­வர் கல்­லுாரி முன்­னாள் முதல்­வர்
2010 ம்ஆண்டு விரு­துக்கு தேர்வு செய்­யப்­பட்ட, அமெ­ரிக்­காவை சேர்ந்த ராஜம், ஜெர்­ம­னியை சேர்ந்த உல்­ரிக் நிக்­லாஸ் ஆகி­யோர் விழா­வி­றகு வர இய­லா­த­தால், அவர்­க­ளுக்கு பிற­தொரு நாளில் விருது வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.:

No comments:

Post a Comment