Monday, 15 April 2019

அரசியல் வாதிகளோ அதிகாரிகளோ தன் நிலைஉணர்ந்து திருந்துவது நல்லது. -மு. ச. கிருஷ்ணவேணி

நாடு எங்கே போகிறது.

தமிழகத்தில் எங்கும் குழப்பமும், போராட்டமும் நடந்தவண்ணம் உள்ளது, இதை காணும் போது நமக்குள் தமிழகம் அமைதிநிலைக்கு திரும்பாதா என்ற ஒரு எண்ணமே நமக்குள் வருகிறது. இங்குள்ள அரசியல் வாதிகள் அரசியலை வியாபாரமாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள், 

தங்களுக்குள் நல்ல புரிதலுடனே எல்லா ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரதமும் நடத்தப்படுகின்றன. இங்கு பொது மக்கள் நலனை விட, தன் மக்கள் நலனை விட சுயநலனும், பேராசையும் தான் தலைவிரித்து ஆடுகிறது. 

இதனால் மக்கள் நாம் யாரை நம்புவது, என்ற குழப்பத்திலேயே பயத்திலேயும் இருப்பதை பார்க்கும் போது ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்கின்ற குழப்பம் நமக்கும் வருகிறது. 

மேலும் சுதந்திரமான இந்த நாட்டில் அரசியல்வாதிகளையோ ஆளும் ஆட்சியாளர்களையோ அவர்களது குறைகளை எடுத்துசொல்ல அரசுக்கு கடிதம் மூலமாகவோ, அல்லது பத்திரிகைகள் மூலமாகவோ சுட்டிக்காட்ட விரும்பினாலோ கூட அவர்கள் மீது வழக்குபதிவது இப்போது வாடிக்கையாகிவிட்டது . இதையும் மீறி சில பத்திரிகைகளும், சில செய்தியாளர்களும் தன்பணியைசெய்துவிட்டு கம்பி எண்ணிவிட்டு வந்தவர்களும் உண்டு. 

ஏனென்றால் ஒருவர் சுட்டிக்காட்டும் போது மற்றவர்களுக்கும் அந்த உண்மை தெரிந்தால் அவர்களும் கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டால் நமது அரசியல் வாழ்க்கை, வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தானோ என்னவோ, ஆரம்பத்திலேயே, அவர்களை கண்டிப்பதாக நினைத்து அவர்கள் மீது காவல்துறை துணையுடன் கடுமையான தாக்குதல்களையும், வழக்குகளையும் அதிகாரவர்க்கம் ஏவுகிறது . இது நேர்மையானவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து போராட தோன்றும் உணர்வுகளை தோற்றுவிக்கிறது . 

தவிர சில சுயநலவாதிகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கேற்ற வகையில் மக்கள் மத்தியில் பிரச்சனைகளை புதிது புதிதாக தோற்றுவித்து, பலனடைகிறார்கள். 

இவ்வாறாக மற்றவர்களின் சுயநலத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் மட்டுமே பொதுமக்கள் தவறான வாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றனர். 

இதில் வேதனை என்னவென்றால் படித்தவர்களும், அரசு அதிகாரிகளும் அதிக பேராசையால் அடுத்தவனை கெடுக்கின்றனர், இதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரசு சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா தட்டுவதுபோல், மக்களின் வரிப்பணம் மற்றும்பிற சலுகைகளை விழுங்கி ஏப்பம் விட்டுவருகின்றனர். 

இதில் கொடுமை என்னவென்றால் இந்த கேடுகெட்டவர்கள் மீதும் சட்டம் கடுமையாக பாய்வது போல நடிக்கும் அனால் பணத்தை பார்த்ததும் பயந்து பின் வாங்கும் நிலையில் தான் நாடு தற்போது உள்ளது. இதே நிலை நீடித்தால் கண்டிப்பாக மக்கள் இறங்கி போராடவும், தயங்க மாட்டார்கள். தற்போது நம் செய்தித்தாள்களில் அடிக்கடி சில, பல பகுதி மக்கள் தங்களின் அடிப்படை பிரட்சகனைக்காக போராட்டம் நடத்துவதையும், பல அதிகாரிகள் மக்களால் சிறைபிடிக்கப்படுவதும் நாம் காண்கின்றோம், அறிகின்றோம். 

எனவே அதிகாரிகள் இதை உணர்ந்து திருந்த வேண்டும் , இல்லையெனில் மக்களால் திருத்தப்படுவார்கள், நாடு இதை நோக்கியே செல்கிறது. மக்களே தங்கள் தேவைகளுக்காக இவர்களின் கள்ளத்தனம் உணர்ந்து நேரிடையாக போராட இறங்கி விட்டனர். எனவே அரசியல் வாதிகளோ அதிகாரிகளோ தன் நிலைஉணர்ந்து திருந்துவது நல்லது. 

-மு. ச. கிருஷ்ணவேணி -ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

2016 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிகளவில் பணம் பிடிபட்டுள்ளது.

2016 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிகளவில் பணம் பிடிபட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

நாளை மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

நாளை மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது -தேர்தல் ஆணையம்

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் -மாஃபா பாண்டியராஜன் பேட்டி.

விவசாயிகள் ஒத்துழைப்போடு 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் - பூந்தமல்லியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி.

ரூ.499.47 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

நாடு முழுவதும் தேர்தல் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.2550.75 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை ரூ.499.47 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

"யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

      சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணன்கோவில் பகுதியில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த போது பேசிய அவர், சிலரின் தூண்டுதலால் இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக கூறினார். மேலும், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உட்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ரயிலில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் - தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய ரயில் நிலையங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.

ரயில் நிலையங்களில் உள்ள சட்டவிரோத பேனர்களை ரயில்வே டிஜிபி, ஐஜி ஆகியோரின் பாதுகாப்புடன் உடனடியாக அகற்ற வேண்டும், ரயில் நிலைய சுவர்களில் உள்ள விளம்பரங்களையும் அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.

ரயிலில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

அரசியல் கட்சிகள் மீது 746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனகாவல்துறை தேர்தல் சிறப்பு பிரிவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் மீது 746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - காவல்துறை தேர்தல் சிறப்பு பிரிவு

சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் பணப்பட்டுவாடா குறித்து ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை - காவல்துறை தேர்தல் சிறப்பு பிரிவு

தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து புதிய அரசாணை வெளியிட கோரிய வழக்கு.

தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

லோக் ஆயுக்தா தலைவர் நியமனம். நியமன ஆணையை வழங்கினார், ஆளுநர் பன்வாரிலால்.

லோக் ஆயுக்தா தலைவர் நியமனம். நியமன ஆணையை வழங்கினார், ஆளுநர் பன்வாரிலால்.

லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை உறுப்பினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோரும் நியமன ஆணைகளை பெற்றனர்

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

கன்னியாகுமரி: தக்கலையில் கட்சி தொண்டர்களுக்கு பணம் விநியோகித்த புகாரில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

அதிமுக ஒன்றிய செயலாளர் மெர்லின்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு

தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தாஜி நிஷா கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை